கடந்த சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பழி தீர்க்கும் வகையில் திமுகவின் அபார வெற்றி

கோவை மாநகராட்சியில் இதுவரை திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த 2-தேர்தல்களிலும், மேயர் பதவியைக் கூட்டணிக் கட்சிகளுக்கே வழங்கியது. இந்த தேர்தல் வெற்றி மூலம் மாநகராட்சியில் முதல் முறையாக திமுக மேயர் பதவியைக் கைப்பற்றுவதுடன், முதல் பெண் மேயராகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.


கோவை:கடந்த சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பழி தீர்க்கும் வகையில் திமுகவின் அபார வெற்றி அக்கட்சியினர் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று 17 இடங்களில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக முன்னிலையிலிருந்து வந்தது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வெற்றியைப் பெற்று வந்தனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் போது கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதேபோல மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகள் உள்ளன.

கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய 3 நகராட்சிகள் புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக நகராட்சி தேர்தலைச் சந்தித்தது. இதில் 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது. மொத்தம் உள்ள 198 இடங்களில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அதிமுக 23 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

அதிமுக ஒரு நகராட்சியைக் கூட கைப்பற்றவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் உள்ள 504 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 378 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதிமுக 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 27 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதேபோல பாஜக 5 இடங்களிலும், மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகள் திமுக வசமானது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 15 இடங்களில் திமுக 5 இடங்களில் திமுக வென்ற நிலையில், 10 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சுயேச்சைகள் பேரூராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல கோவை மாநகராட்சி பகுதிகளிலும் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கோவை மாநகராட்சியில் இதுவரை அறிவிக்கப்பட்ட 66 இடங்களில் 62 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக 51 இடங்களை இதுவரை கைப்பற்றியுள்ளது. இதுவரை காங்கிரஸ் 5 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மை பலத்துடன் திமுக மாநகராட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக இதுவரை 3 இடங்களிலும், சுயேச்சையாகப் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மாநகராட்சியில் இதுவரை திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த 2 தேர்தல்களிலும், மேயர் பதவியைக் கூட்டணிக் கட்சிகளுக்கே வழங்கியது. இந்நிலையில் இந்த தேர்தல் வெற்றி மூலம் கோவை மாநகராட்சியின் முதல் முறையாக திமுக மேயர் பதவியைக் கைப்பற்றுவதுடன், முதல் பெண் மேயராகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.கடந்த சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பழி தீர்க்கும் வகையில் திமுகவின் அபார வெற்றி, அக்கட்சியினர் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...