நகர்புற உள்ளாட்சி தேர்தல்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட 20 பேர் போட்டியின்றி தேர்வு..!

அதேபோல, தாராபுரம் தாலுகாவில் மொத்தம் 5 பேரூராட்சிகள் உள்ள நிலையில், 4 பேரூராட்சிகளில் 17 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகராட்சி உட்பட 20 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

இதில் உடுமலை நகராட்சியில் ஒருவரும், சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 13 பேர், மடத்துக்குளம் பேரூராட்சியில் ஒருவர், கொளத்துபாளையம் பேரூராட்சியில் ஒருவர், ருத்ராவதி பேரூராட்சியில் 2 பேர், மூலனூர் மற்றும் முத்தூர் பேரூராட்சிகளில் தலா ஒருவர் என மேற்கண்ட பேரூராட்சிகளில் 19 பேரும் என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 20 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் மொத்தம் 5 பேரூராட்சிகள் உள்ள நிலையில், 4 பேரூராட்சிகளில் 17 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 13 வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-

(1) திருமதி பி.செல்வி,1வது வார்டு தேவநல்லூர், திமுக வேட்பாளர்

(2) திருமதி.கே செல்வி 2வது வார்டு, கொட்ட முத்தாம்பாளையம், திமுக வேட்பாளர்

(3) திருமதி .மருதீஸ்வரி சோமனூத்து, 4வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி (திமுக கூட்டணி வேட்பாளர்)

(4) திரு.ஆர். கோவிந்தராஜ் 5வது வார்டு சீலநாயக்கன்பட்டி திமுக வேட்பாளர்

(5) திருமதி.செ. கன்னீஸ்வரி 6வது வார்டு சின்னக்காம்பாளையம் திமுக வேட்பாளர்

(6) திருமதி.ஆ. மீனாட்சி 8வது வார்டு சிக்கினாபுரம் திமுக வேட்பாளர்

(7)திருமதி.வெ. கமலம் 9வது வார்டு செலாம் பாளையம், சுயேட்சை வேட்பாளர் (திமுக ஆதரவு)

(8) திரு பிரதாப் மூர்த்தி 10வது வார்டு செலாம் பாளையம், திமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர்கள்

(9)திரு சிவகுமார் 3,வது வார்டு அதிமுக வேட்பாளர்

(10)திரு,சுரேஷ்குமார், 11வது வார்டு அதிமுக வேட்பாளர்.

(11)திருமதி முருகன்பால் 13,வது வார்டு அதிமுக வேட்பாளர்

(12)திருமதி பிரியங்கா 14வது வார்டு அதிமுக வேட்பாளர்.

(13)திருமதி மகேஸ்வரி 15-ஆவது வார்டு அதிமுக வேட்பாளர்.

போட்டியின்றி தேர்வான எட்டு வேட்பாளர்களில் 6 பேர் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியில்1, சுயேச்சை வேட்பாளர்-1, அதிமுகவில் 5 வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ருத்திராவதி பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் விபரம் வருமாறு

1- திருமதி .வேலுமணி, 8வது வார்டு சுயேட்சை வேட்பாளர்

2- திருமதி சுமதி 14வது வார்டு அதிமுக வேட்பாளர்

இதேபோல், மூலனூர் ஊராட்சி ஒன்றியம் மூலனூர் பேரூராட்சியில் 12 வது வார்டில் கலாவதி ராமநாதன் சுயேச்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், கொளத்துபாளையம் பேரூராட்சியில் 17வது வார்டு தேன்மொழி நாகராஜ் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல், உடுமலை நகராட்சியில் 14வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருமதி மும்தாஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர் சாய்ரா பேகம் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டார்.

மடத்துக்குளம் பேரூராட்சியில் 11வது வார்டு திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்பொழுது மதிமுகவை சேர்ந்த திருமதி சிவமணி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் முத்தூர் பேரூராட்சியில் 2வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மணிமேகலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...