தமிழகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை கண்டறிய 4-கட்ட முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4-ம் கட்ட ஆய்வில் கோவை, சேலத்தில் 85-சதவீதமும், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 87-சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. எதிர்பாற்றல் அதிகரிப்பதற்குத் தடுப்பூசி விழிப்புணர்வே முக்கிய காரணம்.
கோவை: தமிழகத்தில் பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ளது. இதுகுறித்துக் கண்டறியச் சுகாதாரத் துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
4-வது கட்ட ஆய்வு:-
மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 3-கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையில் பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பாற்றால் கண்டறியும் 3-வது கட்ட ஆய்வுகளில் 42-இடங்களில் தலா 30-பேர் வீதம் 1,260-பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து 4-வது கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.
தடுப்பூசி விழிப்புணர்வு:-
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை கண்டறிய 4-கட்ட முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் 32-சதவீதம் பேருக்கும், 2-ம் கட்ட ஆய்வில் 29-சதவீதம் பேருக்கும், 3-ம் கட்ட ஆய்வில் 70-சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்பாற்றல் கண்டறியப்பட்டது.
4-ம் கட்ட ஆய்வில் கோவை, சேலத்தில் 85-சதவீதமும், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 86-சதவீதமும், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 87-சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. எதிர்பாற்றல் அதிகரிப்பதற்குத் தடுப்பூசி விழிப்புணர்வே முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
4-வது கட்ட ஆய்வு:-
மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 3-கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையில் பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பாற்றால் கண்டறியும் 3-வது கட்ட ஆய்வுகளில் 42-இடங்களில் தலா 30-பேர் வீதம் 1,260-பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து 4-வது கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.
தடுப்பூசி விழிப்புணர்வு:-
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை கண்டறிய 4-கட்ட முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் 32-சதவீதம் பேருக்கும், 2-ம் கட்ட ஆய்வில் 29-சதவீதம் பேருக்கும், 3-ம் கட்ட ஆய்வில் 70-சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்பாற்றல் கண்டறியப்பட்டது.
4-ம் கட்ட ஆய்வில் கோவை, சேலத்தில் 85-சதவீதமும், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 86-சதவீதமும், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 87-சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. எதிர்பாற்றல் அதிகரிப்பதற்குத் தடுப்பூசி விழிப்புணர்வே முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.