கோவையில் தடுப்பூசி விழிப்புணர்வால் கொரோனா எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை கண்டறிய 4-கட்ட முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4-ம் கட்ட ஆய்வில் கோவை, சேலத்தில் 85-சதவீதமும், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 87-சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. எதிர்பாற்றல் அதிகரிப்பதற்குத் தடுப்பூசி விழிப்புணர்வே முக்கிய காரணம்.


கோவை: தமிழகத்தில் பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ளது. இதுகுறித்துக் கண்டறியச் சுகாதாரத் துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

4-வது கட்ட ஆய்வு:-

மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 3-கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையில் பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பாற்றால் கண்டறியும் 3-வது கட்ட ஆய்வுகளில் 42-இடங்களில் தலா 30-பேர் வீதம் 1,260-பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து 4-வது கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.

தடுப்பூசி விழிப்புணர்வு:-

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை கண்டறிய 4-கட்ட முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் 32-சதவீதம் பேருக்கும், 2-ம் கட்ட ஆய்வில் 29-சதவீதம் பேருக்கும், 3-ம் கட்ட ஆய்வில் 70-சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்பாற்றல் கண்டறியப்பட்டது.

4-ம் கட்ட ஆய்வில் கோவை, சேலத்தில் 85-சதவீதமும், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 86-சதவீதமும், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 87-சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. எதிர்பாற்றல் அதிகரிப்பதற்குத் தடுப்பூசி விழிப்புணர்வே முக்கிய காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...