மேட்டுப்பாளையம் - பில்லூர் சாலையில் அரசுப்பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை..!

பேருந்து நீர் ஆடி என்ற மலைக் கிராமத்திற்கு அருகே சென்ற போது வந்த காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் - பில்லூர் சாலையில் அரசுப்பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளான வால்பாறை, மதுக்கரை, எட்டிமடை, ஆனைகட்டி, தடாகம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் யானை நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில், அவ்வப்போது காட்டை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அதனை பொதுமக்கள், வனத்துறையினர் விரட்டி வருகின்றனர்.

சில சமயங்களில் சாலைகளில் வந்து வாகனங்களை மறித்து உலாவருகின்றன. அதனிடம் கிராம மக்கள் பேச்சுக் கொடுத்து வனத்துக்குள் அனுப்பும் ஒரு சில சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து தினசரி பில்லூர் அணை பகுதிக்கு அரசுப்பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

வழக்கம்போல, கோவையிலிருந்து பில்லூர் அணை பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நீர் ஆடி என்ற மலை கிராமத்திற்கு அருகே சென்ற போது எதிரே ஒற்றை காட்டு யானை நடந்து வந்தது.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். யானை சிறிது நேரம் அங்கேயே உலாவிக் கொண்டிருந்தது. பயணிகள் அச்சத்துடன் அமைதியாக இருந்தனர்.

பின்னர், சிறிது நேரம் கழித்து காட்டு யானை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்ததையடுத்து, அரசு பேருந்து பில்லூர் அணைப் பகுதிக்கு சென்றது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...