நாளை இரவு 7 மணிக்கு கொடியேற்றமும், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.
கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த 14ம் தேதி முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நாளை இரவு 7 மணிக்கு கொடியேற்றமும், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.
முன்னதாக, 9க்கு 5 அளவு கொண்ட வெண்மை நிற துணியில் சிம்ம வாகனமும், சக்தியின் சின்னமான சூலாயுதமும், மஞ்சள் சிகப்பு வண்ணங்களில் சிவாச்சாரியர்களால் வரைந்து வடிவமைக்கப்பட்டு, கோனியம்மன் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜையும் செய்யப்படும்.
தொடர்ந்து, மங்கள ஒலி முழங்க கொடிமரத்திற்கு சமர்ப்பித்து, சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்படுகிறது. அதன்பின் அக்னிகம்பம், இசையொலிக்கு மத்தியில் கோவிலை மூன்று முறை வலம் வரச்செய்யப்படுகிறது.
சிறப்பு பூஜைகளை அடுத்து கோவில் முகப்பில் அக்னிக்கம்பம் நட்டு, அதில் அக்னிச்சட்டி வைத்து தீ முழக்கமிடப்படும். தொடர்ந்து, மங்கள இசை முழங்க கோனியம்மனுக்கு முத்தாடை அணிவித்து, விநாயகர், சூலதேவர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளுவிக்கப்படுவர்.
கோவிலில் இருந்து இசை முழங்க அம்மன் சப்பரத்தில் புறப்பட்டு, பெரியகடை வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி, ராஜ வீதி, தேர்நிலையத்தை தொடர்ந்து மீண்டும் பெரியகடை வீதி வழியாக மீண்டும் கோவிலை அடையும். பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை சார்பாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த 14ம் தேதி முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நாளை இரவு 7 மணிக்கு கொடியேற்றமும், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.
முன்னதாக, 9க்கு 5 அளவு கொண்ட வெண்மை நிற துணியில் சிம்ம வாகனமும், சக்தியின் சின்னமான சூலாயுதமும், மஞ்சள் சிகப்பு வண்ணங்களில் சிவாச்சாரியர்களால் வரைந்து வடிவமைக்கப்பட்டு, கோனியம்மன் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜையும் செய்யப்படும்.
தொடர்ந்து, மங்கள ஒலி முழங்க கொடிமரத்திற்கு சமர்ப்பித்து, சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்படுகிறது. அதன்பின் அக்னிகம்பம், இசையொலிக்கு மத்தியில் கோவிலை மூன்று முறை வலம் வரச்செய்யப்படுகிறது.
சிறப்பு பூஜைகளை அடுத்து கோவில் முகப்பில் அக்னிக்கம்பம் நட்டு, அதில் அக்னிச்சட்டி வைத்து தீ முழக்கமிடப்படும். தொடர்ந்து, மங்கள இசை முழங்க கோனியம்மனுக்கு முத்தாடை அணிவித்து, விநாயகர், சூலதேவர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளுவிக்கப்படுவர்.
கோவிலில் இருந்து இசை முழங்க அம்மன் சப்பரத்தில் புறப்பட்டு, பெரியகடை வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி, ராஜ வீதி, தேர்நிலையத்தை தொடர்ந்து மீண்டும் பெரியகடை வீதி வழியாக மீண்டும் கோவிலை அடையும். பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை சார்பாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.