கற்பகம்‌ கலை மற்றும்‌ அறிவியல் கல்லூரியில்‌ பயின்ற மாணவர்களின்‌ சந்திப்பு நிகழ்ச்சி

கற்பகம்‌ உயர்கல்விக்கழக முன்னாள்‌ மாணவர்‌ கூட்டமைப்பின்‌ சார்பில்‌, 1995-முதல்‌ 2000-ஆம்‌ ஆண்டு வரையில்‌ கற்பகம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ பயின்ற மாணவர்களின்‌ சந்திப்பு நிகழ்ச்சியானது இன்று சிறப்பாக நடைபெற்றது.


கோவை: கற்பகம்‌ உயர்கல்விக்கழக முன்னாள்‌ மாணவர்‌ கூட்டமைப்பின்‌ சார்பில்‌, 1995-முதல்‌ 2000-ஆம்‌ ஆண்டு வரையில்‌ கற்பகம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ பயின்ற மாணவர்களின்‌ சந்திப்பு நிகழ்ச்சியானது 20.02.2022, ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது.

அந்நிகழ்வில்‌ 250-க்கும்‌ மேற்பட்ட முன்னாள்‌ மாணவர்கள்‌ தங்களது குடும்பத்துடன்‌ கலந்துகொண்டு மகிழ்ந்தனர்‌. முன்னதாக இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த முன்னாள்‌ மாணவர்களைக் கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ மாணவர்‌ நல முதன்மையர்‌ முனைவர்‌ ப.தமிழரசி‌ வரவேற்றார்‌.

அதைத்‌ தொடர்ந்து கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ முதன்மைச்‌ செயல்‌ அலுவலர்‌ ௧. முருகையா மாணவர்களுக்கு வாழ்த்துகள்‌ கூறி மகிழ்ந்தார்‌. விழாவில்‌ தலைமை உரை ஆற்றிய கற்பகம்‌ நிகர் நிலைப்பல்கலைக்கழக வேந்தர்‌ டாக்டர்‌ இராச. வசந்த குமார்‌ ‌ முன்னாள்‌ மாணவர்களின்‌ தொழில்‌ முனைதல்‌ மற்றும்‌ அதற்கான திறன்‌ மேம்பாடு முதலான நிலைகளில்‌ கற்பகம்‌ கல்வி நிறுவனம்‌ என்றும்‌ அவர்களுடன்‌ துணைநிற்கும்‌; அத்தகைய வாய்ப்புகளுக்காக கற்பகம்‌ கல்வி நிறுவனங்களைத்‌ தவறாமல்‌ நாடுங்கள்‌ என்று அறிவுறுத்தினார்‌.



தொடர்ந்து, கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ பெயரால்‌ தாங்களும்‌ உயர்ந்து, கற்பகம்‌ கல்வி நிறுவங்களின்‌ இந்நாள்‌ மாணவர்களின்‌ வளர்ச்சிக்கும்‌ துணை செய்யுங்கள்‌. கற்பகத்தில்‌ கல்விபெற்றால்‌, வானமும்‌ வசப்படும்‌ என்ற வெற்றிச்‌ சிந்தனையைச்‌ சமுதாயத்தில்‌ ஆழமாகப்‌ பதிவுசெய்யுங்கள்‌ என்று வலியுறுத்தினார்‌.

கற்பகம்‌ கல்லூரியில்‌ பயின்ற காலம்‌ என்பது, அழகிய கனாக்‌ காலம்‌; அந்நாள்களில்‌ ஆசிரியர்கள்‌ தங்கள்‌ மீது காட்டிய அன்பும்‌, அரவணைப்பும்‌, கண்முப்பும்‌, தேவையான நேரத்தில்‌ வழங்கிய உயர்ந்த அறிவுரைகளும்‌ இன்றைய தங்களது வளமான வாழ்வுக்கு அமத்தளமாக விளங்குவதாக முன்னாள்‌ மாணவர்கள்‌ தங்களது கல்லூரிக்கால நினைவுகளைப்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...