கோவை பீளமேடு அருகே ஓட்டு போட சென்ற பஞ்சு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை

கோவை பீளமேடு அருகே ஓட்டு போட சென்ற பஞ்சு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 10-பவுன் தங்க நகைகள், பணம் ரூ.5000-ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு அருகே ஓட்டு போட சென்ற பஞ்சு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 10-பவுன் தங்க நகைகள், பணம் ரூ.5000-ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு அடுத்தகோல்ட்வின்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (56). பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஓட்டு போட வீட்டிற்குஅருகிலுள்ள பள்ளிக்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து துடியலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றார். மீண்டும் இன்று காலை வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 10-பவுன் தங்க நகைகள், பணம் ரூ.5000-ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தி பீளமேடுபோலீசில் புகார் அளித்தார். உடனே பீளமேடு போலீசார்மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

பின்னர், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்துத் திருடிச் சென்ற கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...