திருப்பூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நகராட்சி பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12-இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 60.66-சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலிஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7-மணி முதல் துவங்கி மாலை 6-மணி வரை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6-நகராட்சி மற்றும் 15-பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதற்காகத் திருப்பூர் மாவட்டத்தில் 1299-வாக்குச்சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் 55.40- சதவீதமும் நகராட்சி பகுதிகளில் 66.35-மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 75.34-சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் 60.66-சதவிகித வாக்குப்பதிவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நகராட்சி பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12-இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7-மணி முதல் துவங்கி மாலை 6-மணி வரை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6-நகராட்சி மற்றும் 15-பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதற்காகத் திருப்பூர் மாவட்டத்தில் 1299-வாக்குச்சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் 55.40- சதவீதமும் நகராட்சி பகுதிகளில் 66.35-மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 75.34-சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் 60.66-சதவிகித வாக்குப்பதிவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நகராட்சி பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12-இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.