கோவையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரிக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு..!

முன்னதாக, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்த வருவார்கள் என வாக்கு சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் பி.பி.கிட்டுடன் தயாராக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வரவில்லை.



கோவை: கோவையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரிக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.



நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. கோவையின் பல்வேறு இடங்களில் 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்கள், வாக்களிக்க முடியாததால் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு செலுத்த வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு சாவடி மையத்தின் வாசல் மூடப்பட்டதால், வாக்கு செலுத்த வாக்கு சாவடிக்கு வெளியே காத்திருந்த பொது மக்களிடம் இது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்தும் நேரம் என்பதால் இதற்கு மேல் பொது மக்கள் வாக்கு செலுத்த அனுமதிக்க முடியாது என்ற தேர்தல் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

மேலும், காலையில் தாமதமாகவே வாக்கு சாவடியில் மக்களை வாக்களிக்க அனுமதித்ததாகவும் தற்போது தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அனைவரையும் தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.



மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு பதிவு செய்ய வருவார்கள் என்று வாக்கு சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் பி.பி.கிட்டுடன் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்த வாக்கு சாவடிகளுக்கு வரவில்லை.



இதனிடையே, வருகின்ற 22ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை அடுத்து வாக்கு சாவடிகளில் இருந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் பாதுகாப்புடன் வாகனங்களில் ஜி.சி.டி கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...