பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரியும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவதை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையினை உடனடியாக சேர்க்கவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

இதேபோல கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம் பொங்கல் விழா கொண்டாட அனுமதி வழங்கியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...