பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரியும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவதை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையினை உடனடியாக சேர்க்கவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

இதேபோல கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம் பொங்கல் விழா கொண்டாட அனுமதி வழங்கியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...