பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரியும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவதை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையினை உடனடியாக சேர்க்கவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

இதேபோல கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம் பொங்கல் விழா கொண்டாட அனுமதி வழங்கியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...