கோவையில் முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற இருவர் மீது வழக்கு..!

ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்த சம்பளத்தை கேட்டதற்காக பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர்.


கோவை: கோவையில் முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தெற்கு மசி வீதி இப்பகுதியைச் சேர்ந்த கோபால் ரத்தினம் என்பவரின் மகன் ரத்தினவேல் (76). இவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தார்.

தொடர்ந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அந்த நிறுவனத்தில் சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை ரத்தினவேல் செக்யூரிட்டி நிறுவன அலுவலகத்திற்கு சென்று தனது சம்பளத்தை கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த நிறுவனத்தின் உரிமையாளர் திலீப்குமார் ரத்தினவேலுவை நவ இந்தியா அருகிலுள்ள குதிரை பண்ணை அருகே வர சொல்லி இருக்கிறார். இதை அடுத்து ரத்தினவேல் அங்கு சென்றார். அங்கு வந்த திலிப்குமார் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வருவதாக கூறியிருக்கிறார்.

அப்போது, ரத்தினவேலுவுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திலிப் குமார் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ரத்தினவேலு மீது ஊற்றினார். அதேசமயத்தில் செக்யூரிட்டி நிறுவனத்தில் பீல்டு ஆபீஸராக பணிபுரியும் ஜான் என்பவர் தீக்குச்சியை கொளுத்தி ரத்தினவேலு மீது வீசினார். இதில் ரத்தினவேலு மீது தீ பற்றி எரிந்தது.

இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் ரத்தினவேலுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த பீளமேடு போலீசார் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் திலீப்குமார் மற்றும் பீல்டு ஆபீஸர் ஜான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...