காலையில் சற்று தாமதமாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது சரியாக 5 மணிக்கு வாக்கு சாவடிகளை மூடுவது சரியல்ல என்று ஆர்ப்பாட்டம்.
கோவை: கோவை மாவட்டம் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் இன்று 5 மணியுடன் முடிவடைந்ததால், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
வாக்களிக்க முடியாததால் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்சி பிரமுகர்கள், வாக்காளர்களை உள்ளே விடும்படி காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், வாக்கு சாவடி கேட்டை காவல் துறையினர் பூட்டினர்.
வாக்கு சாவடி மையங்கள் மூடப்பட்டதால் வாசலில் வாக்காளர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் காத்திருக்கும் காட்சிகளை காண முடிந்தது.

இந்த நிலையில், வார்டு 30 கணபதி பகுதியில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலையில் சற்று தாமதமாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது சரியாக 5 மணிக்கு வாக்கு சாவடிகளை மூடுவது சரியல்ல என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்களிக்க முடியாததால் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்சி பிரமுகர்கள், வாக்காளர்களை உள்ளே விடும்படி காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், வாக்கு சாவடி கேட்டை காவல் துறையினர் பூட்டினர்.
வாக்கு சாவடி மையங்கள் மூடப்பட்டதால் வாசலில் வாக்காளர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் காத்திருக்கும் காட்சிகளை காண முடிந்தது.
இந்த நிலையில், வார்டு 30 கணபதி பகுதியில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலையில் சற்று தாமதமாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது சரியாக 5 மணிக்கு வாக்கு சாவடிகளை மூடுவது சரியல்ல என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.