மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வரும் பட்சத்தில், அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 60 வார்டுகளுக்கும் 776 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்தி குமார் பாடி வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 60 வார்டுகளுக்கும் 776 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்தி குமார் பாடி வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.