எந்த வாக்குச்சாவடி என்பது கண்டறிய முடியாததால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதால் ஒரு சில பகுதிகளில் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
கோவை மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இளம் வாக்காளர் ஒருவருக்கு எந்த வாக்குச்சாவடி என்பது கண்டறிய முடியாமல் சிரமப்பட்டு வந்தார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அங்கு இருக்கும் அதிகாரிகளிடம் கேட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இணையதளத்தில் பார்க்க முயன்ற போதும் பார்க்க முடியவில்லை என தெரிவித்த அவர், இறுதி வரை எந்த வாக்குச் சாவடி என கண்டுபிடிக்க முடியாததால் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றார்.
இதேபோல, சித்தாபுதூர் பகுதியில் உள்ள வாக்காளர்களும் வாக்குச் சாவடி மையம் தெரியாமல் சிரமப்பட்டனர். வார்டு மறுவரை செய்யப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதால், ஒரு சில இடங்களில் வாக்காளர்கள் தங்கள் வாக்கு மையம் எது என தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.