பொள்ளாச்சியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விறுவிறு வாக்குப்பதிவு..!

காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி பகுதியில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கோவை தெற்கு மாவட்டத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் உள்ளன.

அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த 523 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 253 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.



இன்று சரியாக ஏழு மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.



பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச்சாவடி மையங்களில் நுழைவாயில் முன்பு சானிடைசர் தெளித்து கைகளை சுத்தம் செய்தும், அதே போல, முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...