கோவையில் தள்ளாத வயதிலும் வீல் சேரில் வந்து வாக்களித்த 95 வயது முதியவர்..!

வாக்களித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கும் சில இளைஞர்கள் மத்தியில், ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று வந்த முதியவரை அனைவரும் பாராட்டினர்.


கோவை: கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் நடக்க முடியாத சூழலிலும், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து அதிகாரிகள் வழங்கிய வீல் சேரில் சென்று வாக்களித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்த மக்கள் பலரும் இன்று அதிகாலை முதலே வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே, கோவையைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் நடக்கவே முடியாத சூழலிலும் சிரமப்பட்டு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. 95 வயது முதியவரான இவர் வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து தனது கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த முதியவர் இன்று காலையிலேயே நல்லாம்பாளையம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார்.



நடக்கவே முடியாமல் வந்த அவருக்கு அதிகாரிகள் வீல் சேர் வழங்கினர். தொடர்ந்து அவர் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பினார்.

வாக்களித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கும் சில இளைஞர்கள் மத்தியில் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற முனைப்போடு வந்து வாக்குப்பதிவு செய்த முதியவரை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...