ஒரே இடத்திலிருந்து, 424 மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்து பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில், அதை தேர்தல் கண்காணிப்பு மையத்துக்கு தகவல் அளிக்கப்படும். மேலும், உடனடியாக அந்த பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் "ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்", முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 424 பதற்றமான வாக்குச்சாவடிகளை ஒரே இடத்தில் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் அமைக்கபடுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கோவையில் தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில், மாநகராட்சியில் 1290 வாக்குச்சாவடிகள் உட்பட மாவட்டம் முழுவதும் 2303 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில், கோவை மாநகராட்சி பகுதியில் 169 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகளில் 112, பேரூராட்சிகளில் 143 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 424 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கண்காணிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்முறையாக "ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம்" அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்திலிருந்து, 424 மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்து பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில், அதை தேர்தல் கண்காணிப்பு மையத்துக்கு தகவல் அளிக்கப்படும். மேலும், உடனடியாக அந்த பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.