அமைதியை சீர்குலைக்கும் வகையில், கோவை வடவள்ளி, காளப்பட்டி போன்ற பகுதிகளில் தங்கியுள்ள ஆளுங்கட்சியை சேர்ந்த வெளி மாவட்ட நபர்களை வெளியேற்ற வேண்டும் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று அவரது வாக்கினைப் பதிவு செய்தார்.



கோவை: கோவையில் வடவள்ளி, காளப்பட்டி என்று பல இடங்களில் இன்னும் வெளி மாவட்ட நபர்கள் இருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற தேர்தல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.



கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று அவரது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மாவட்டத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த ஆட்சியில் கொடுத்து இருக்கின்றோம்.

இதனால், கோவை மாவட்ட மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில், கோவையில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி இருப்பதால், உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றிபெற தில்லுமுல்லு, விதிமீறல்களை திமுகவினர் செய்து வருகின்றனர்.

இதனால் தான், கூடுதல் அதிகாரியை கோவை மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், வடவள்ளி, காளப்பட்டி போன்ற பகுதிகளில் வெளிமாவட்ட நபர்கள் இன்னும் தங்கி இருக்கின்றனர். காவல் துறையினர் அவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அந்த பகுதிகளில் விதிமுறைப்படி தேர்தல் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார்.

கோவையில் மேயர் பதவியை அதிமுக நிச்சயம் கைப்பற்றும் என தெரிவித்த அவர், நேற்று முன் தினமே ஆட்சியர் வெளிமாவட்ட நபர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நேற்று தான் அறிவிப்பு கொடுக்கப்பட்டது, என்று சுட்டிக்காட்டினார்.

வெளிமாவட்ட நபர்கள் இன்னும் கோவையில் இருக்கின்றனர் எனவும், ஏதாவது சூழ்ச்சி செய்து வெற்றி பெற முயற்சிப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும், அதிமுக வெற்றி பெற்று இடங்களில், திமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், இதனால் தான் விதிமீறல் இருந்தால், அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...