நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி எஸ் நாகராஜனை நியமித்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், தற்போது கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டத்தை கலவர பூமியாக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்தலை நேர்மையாக நடத்த துணை இராணுவத்தை கொண்டு வரவேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், கோவையில் நேர்மையாக தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், தற்போது கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டத்தை கலவர பூமியாக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த தேர்தலை நேர்மையாக நடத்த துணை இராணுவத்தை கொண்டு வரவேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், கோவையில் நேர்மையாக தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.