இது குறித்து வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை அன்னூர் அருகே சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்திய போது, லாரி முன்னோக்கி நகர்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காடுவெட்டி பாளையம் என்ற இடத்தில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பதும், அமேசான் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும், நேற்று சேலத்தில் இருந்து கருமத்தம்பட்டி மற்றும் கோவை பகுதிக்கு பொருட்களை டெலிவரி செய்ய லாரியில் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விசாரணை மேற்கொண்டு அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கருமத்தம்பட்டி போலீசார் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எதிரே இருந்த பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் லாரி ஓட்டுனர் ரமேஷ்பாபு இன்று அதிகாலை இந்த பகுதிக்கு வந்ததும் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்தி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது, லாரி முன்னோக்கி நகர்ந்ததால் அதனை தடுக்க முற்பட்டு விபத்தில் சிக்குவது பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து, கொலை என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் அதனை விபத்து என கண்டறிந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காடுவெட்டி பாளையம் என்ற இடத்தில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பதும், அமேசான் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும், நேற்று சேலத்தில் இருந்து கருமத்தம்பட்டி மற்றும் கோவை பகுதிக்கு பொருட்களை டெலிவரி செய்ய லாரியில் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விசாரணை மேற்கொண்டு அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கருமத்தம்பட்டி போலீசார் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எதிரே இருந்த பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் லாரி ஓட்டுனர் ரமேஷ்பாபு இன்று அதிகாலை இந்த பகுதிக்கு வந்ததும் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்தி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது, லாரி முன்னோக்கி நகர்ந்ததால் அதனை தடுக்க முற்பட்டு விபத்தில் சிக்குவது பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து, கொலை என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் அதனை விபத்து என கண்டறிந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.