கோவை அன்னூர் அருகே சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்திய போது லாரி முன்னோக்கி நகர்ந்து விபத்து - லாரி ஓட்டுநர் உயிரிழப்பு..!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அன்னூர் அருகே சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்திய போது, லாரி முன்னோக்கி நகர்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காடுவெட்டி பாளையம் என்ற இடத்தில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பதும், அமேசான் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும், நேற்று சேலத்தில் இருந்து கருமத்தம்பட்டி மற்றும் கோவை பகுதிக்கு பொருட்களை டெலிவரி செய்ய லாரியில் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விசாரணை மேற்கொண்டு அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கருமத்தம்பட்டி போலீசார் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எதிரே இருந்த பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் லாரி ஓட்டுனர் ரமேஷ்பாபு இன்று அதிகாலை இந்த பகுதிக்கு வந்ததும் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்தி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது, லாரி முன்னோக்கி நகர்ந்ததால் அதனை தடுக்க முற்பட்டு விபத்தில் சிக்குவது பதிவாகியிருந்தது.

இதனை தொடர்ந்து, கொலை என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் அதனை விபத்து என கண்டறிந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...