கோவை மாநகராட்சியில், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில்,தென்னை மரச்சின்னத்தில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் கண்ணன் தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சியில், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில்,தென்னை மரச்சின்னத்தில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் கண்ணன் தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.
கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளில் வேட்பாளர்கள் 778-பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில், தென்னை மரச்சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராகக் கண்ணன் போட்டியிடுகிறார். இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில், தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளை இதுவரை யாரும் செய்து தராததால், சுயேச்சையாகப் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை வெற்றி பெறச்செய்தால், இப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அடிப்படை வசதிகள் முதல் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணிகள் வரை, உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் வசதி, சிறுவர் பூங்கா, பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தனது வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்கு சேகரித்தார்.

அப்போது, தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.
கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளில் வேட்பாளர்கள் 778-பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில், தென்னை மரச்சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராகக் கண்ணன் போட்டியிடுகிறார். இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில், தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளை இதுவரை யாரும் செய்து தராததால், சுயேச்சையாகப் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை வெற்றி பெறச்செய்தால், இப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அடிப்படை வசதிகள் முதல் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணிகள் வரை, உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் வசதி, சிறுவர் பூங்கா, பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தனது வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்கு சேகரித்தார்.
அப்போது, தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.