தென்னை மர சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க, இளநீர் கொடுத்து சுயேச்சை வேட்பாளர் பிரச்சாரம்!!

கோவை மாநகராட்சியில், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில்,தென்னை மரச்சின்னத்தில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் கண்ணன் தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியில், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில்,தென்னை மரச்சின்னத்தில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் கண்ணன் தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.

கோவை மாநகராட்சியில் 100-வார்டுகளில் வேட்பாளர்கள் 778-பேர் போட்டியிடுகின்றனர்.



இதில் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி 55-ஆவது வார்டில், தென்னை மரச்சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராகக் கண்ணன் போட்டியிடுகிறார். இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில், தங்களது பகுதியில் அடிப்படை வசதிகளை இதுவரை யாரும் செய்து தராததால், சுயேச்சையாகப் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை வெற்றி பெறச்செய்தால், இப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிப்படை வசதிகள் முதல் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணிகள் வரை, உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் வசதி, சிறுவர் பூங்கா, பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தனது வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்கு சேகரித்தார்.



அப்போது, தென்னை மரச்சின்னத்தை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள அனைவருக்கும் இளநீரை வழங்கினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...