மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்காக வழங்கிய நிதியை 8-ஆண்டுகளாக முறையாகப் பயன்படுத்தவில்லை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்காக வழங்கிய நிதியை 8-ஆண்டுகளாக முறையாகப் பயன்படுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மசக்காளிப்பாளையம் பகுதியில் நடைப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி பிரச்சாரத்தில் தெரிவித்தார்.


கோவை: மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்காக வழங்கிய நிதியை 8-ஆண்டுகளாக முறையாகப் பயன்படுத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மசக்காளிப்பாளையம் பகுதியில் நடைப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி பிரச்சாரத்தில்தெரிவித்தார்.

கோவை மசக்காளிப்பாளையம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் பாஜகவின் இறுதி பிரச்சாரம் நடைபெற்றது. இதில், பிரச்சார உரை ஆற்றிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இந்தத் தேர்தலில் முக்கியமான மூன்று கட்சிகளுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.



இந்தியாவில் ஐம்பது ஆண்டு காலங்களாக இருந்த இந்திய அரசியலை மாற்றியவர் பிரதமர் மோடி. சாதாரண அரசியல் குடும்ப அரசியலைச் செய்து கொண்டிருந்த இந்தியாவை உடைத்துக் காட்டியது பிரதமர் என தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவைக்கு அளித்து 8-ஆண்டுகள் ஆகிறது என கூறிய அவர் கோவை ஸ்மார்ட் சிட்டியாக மாறவில்லை என தெரிவித்தார்.

கோவை ஒவ்வொரு நாளும் பின் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இங்குள்ள காண்ட்ரேக்கடர்கள் மத்திய அரசின் நிதிகளை விழுங்கி விட்டனர். சிறுவாணி அணையின் நீர் மட்டமும் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். வளர்ச்சி என்கிற பெயரில் மேம்பாலங்கள் அமைத்து சாலைகளைப் பழுதாக்கி உள்ளதாகக் கூறினார்.

திமுகவினர் தரும் கொலுசு ஹைதராபாத்தில் வாங்கியது ஹாட்பாக்ஸ் டெல்லியில் வாங்கியதாக திமுகவினரே தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். நீட் தேர்வில் தேவையில்லாமல் ஒரு பூதத்தை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்தார். தற்போது லஞ்சம் என்பது பெருத்து போயுள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர், இவை எல்லாம் மாற வேண்டுமென்றால் பாஜக வெற்றி பெற வேண்டுமெனக் கூறினார்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவுள்ள தேர்தல் நாளில் மக்கள் பாஜகவிற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்வார்கள் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். கருமத்தம்பட்டியில் பாஜக வேட்பாளர் பரிசு பொருள் தந்தது குறுத்து கேள்வி எழுப்பிய போது தமிழகம் முழுவதும் திமுக கொலுசு ஹாட்பாக்ஸ் தந்து வருவதாகத் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...