கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு; தேர்தல் விதிகளை கடைபிடிக்க அதிகாரிகள் உத்தரவு..!

காலை முதலே வேட்பாளர்கள் வீதி வீதியாக, மேள தாளத்துடன் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.


கோவை: கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், தேர்தல் விதிகளை கடைபிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 100 மாநகராட்சி, 7 நகராட்சிகள் 33 பேரூராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான, வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 28 முதல் கடந்த 4ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர், 5ம் தேதி மனுத்தாக்கல் பரிசீலிக்கப்பட்டன.

இதனிடையே, பேரூராட்சிகளில் 9 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக, கோவை மாவட்டத்தில் 802 பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது.

கோவை மாநகராட்சியில் நூறு வார்டுகளில் 778 வேட்பாளர்கள், மாநகராட்சியில் 861 பேர், பேரூராட்சிகளில் 1727 என மொத்தம் 3,366 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது. எனவே, 6 மணிக்கு மேல், எந்த கட்சியினரும் நேரடி மற்றும் மறைமுக பிரச்சாரம் செய்யக்கூடாது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரச்சாரம் முடிய இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால், காலை முதலே வேட்பாளர்கள் வீதி வீதியாக, மேள தாளத்துடன் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...