நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 55 வயது மாற்றுத்திறனாளிக்கு 4 பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நீலகிரி: நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 55 வயது மாற்றுத் திறனாளிக்கு 4 பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் அப்பாஸ் என்ற நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் அப்பாஸை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது நீலகிரி மாவட்டம் உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரணை செய்த மாவட்ட தலைமை நீதிபதி சஞ்சய் பாபா குற்றவாளிக்கு நான்கு பிரிவுகளின் கீழ் 38 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து குற்றவாளியைக் கோவை மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.