கூடலூர் அருகே குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த மாற்றுத்திறனாளிக்கு 38 ஆண்டு சிறை தண்டனை

நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 55 வயது மாற்றுத்திறனாளிக்கு 4 பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கியுள்ளார்.



நீலகிரி: நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 55 வயது மாற்றுத் திறனாளிக்கு 4 பிரிவுகளின் கீழ் 38 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் அப்பாஸ் என்ற நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நான்கரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அப்பாஸை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது நீலகிரி மாவட்டம் உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரணை செய்த மாவட்ட தலைமை நீதிபதி சஞ்சய் பாபா குற்றவாளிக்கு நான்கு பிரிவுகளின் கீழ் 38 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து குற்றவாளியைக் கோவை மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...