புலியகுளம் வார்டு 64 பகுதியில், பணம்.பட்டுவாடா செய்து வருவதாக, அதே வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோமதி ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி 64 வது வார்டுக்கு உட்பட்ட புலியகுளம் மருதாசல வீதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக, பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

புலியகுளம் வார்டு 64 பகுதியில், திமுகவினர் பணம்.பட்டுவாடா செய்து வருகின்றனர் என்ற தகவலின் பேரில், அதே வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோமதி ராஜன் மற்றும் அவரது கணவர் ஏ.டி.ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் அங்கு சென்ற போது, திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர், என்று குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். அப்போது, பணம் பட்டுவாடா செய்து வந்த நபர்கள், பணத்தை அருகில் இருந்த சிறிய சந்துக்குள் வீசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து பணம் வைத்திருந்த இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால், வார்டு 64 யில் திமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புலியகுளம் வார்டு 64 பகுதியில், திமுகவினர் பணம்.பட்டுவாடா செய்து வருகின்றனர் என்ற தகவலின் பேரில், அதே வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோமதி ராஜன் மற்றும் அவரது கணவர் ஏ.டி.ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் அங்கு சென்ற போது, திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர், என்று குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். அப்போது, பணம் பட்டுவாடா செய்து வந்த நபர்கள், பணத்தை அருகில் இருந்த சிறிய சந்துக்குள் வீசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து பணம் வைத்திருந்த இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால், வார்டு 64 யில் திமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.