கோவை புலியகுளம் பகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுத்து வருவதாக பாஜகவினர் புகார்; போலீசார் விசாரணை

புலியகுளம் வார்டு 64 பகுதியில், பணம்.பட்டுவாடா செய்து வருவதாக, அதே வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோமதி ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 64 வது வார்டுக்கு உட்பட்ட புலியகுளம் மருதாசல வீதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக, பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.



புலியகுளம் வார்டு 64 பகுதியில், திமுகவினர் பணம்.பட்டுவாடா செய்து வருகின்றனர் என்ற தகவலின் பேரில், அதே வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோமதி ராஜன் மற்றும் அவரது கணவர் ஏ.டி.ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் அங்கு சென்ற போது, திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர், என்று குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். அப்போது, பணம் பட்டுவாடா செய்து வந்த நபர்கள், பணத்தை அருகில் இருந்த சிறிய சந்துக்குள் வீசியதாக கூறப்படுகிறது.



இதனையடுத்து, காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து பணம் வைத்திருந்த இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால், வார்டு 64 யில் திமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...