காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசித்திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை: காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசித்திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் மாசிமத்திருத்தேர் பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டும் கொரானோ காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமகத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் பெட்டதம்மன் மலையிலிருந்து பெட்டதம்மன் அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6.30 மணி அளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமானுக்குத் திருக்கல்யாண நடைபெற்றது.
அப்பொழுது அங்கு கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க அரங்கநாதரை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமகா திருத்தேரோட்டம் விழா நாளை தினம் நடைபெற உள்ளது.