நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை கோட்டத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளதாகக் கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை கோட்டத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளதாகக் கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் வசிப்போரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பணி நிமித்தம் காரணமாகத் திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எதிர்நோக்கித் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.
இதனை அடுத்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களில் தங்கி பணி புரிபவர்கள் தேர்தல் நாளான்று வாக்களிக்க ஏதுவாக வரும் 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் கோவை கோட்டத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து திருப்பூர், கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தற்போது இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக மாவட்டம் வாரியாக 50 பேருந்துகள் முதல் கட்டமாக இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் வசிப்போரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பணி நிமித்தம் காரணமாகத் திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எதிர்நோக்கித் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.
இதனை அடுத்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களில் தங்கி பணி புரிபவர்கள் தேர்தல் நாளான்று வாக்களிக்க ஏதுவாக வரும் 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் கோவை கோட்டத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து திருப்பூர், கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தற்போது இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக மாவட்டம் வாரியாக 50 பேருந்துகள் முதல் கட்டமாக இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றார்.