நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கோவையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை கோட்டத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளதாகக் கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவை கோட்டத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளதாகக் கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் வசிப்போரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பணி நிமித்தம் காரணமாகத் திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எதிர்நோக்கித் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.

இதனை அடுத்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களில் தங்கி பணி புரிபவர்கள் தேர்தல் நாளான்று வாக்களிக்க ஏதுவாக வரும் 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் கோவை கோட்டத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையிலிருந்து திருப்பூர், கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தற்போது இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக மாவட்டம் வாரியாக 50 பேருந்துகள் முதல் கட்டமாக இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...