கோவையில் உள்ள கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

தேர்தல் ஆணையம் உடனடியாக கோவையில் உள்ள கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.



கோவை: கோவை தேர்தல் ஆணையம் உடனடியாக கோவையில் உள்ள கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், கோவையில் பல்வேறு இடங்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகவும், இதனை கேட்டால் பாஜகவினரை மிரட்டுவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும், இதனால் சில இடங்களில் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.

எனவே, தேர்தல் ஆணையம் உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள கரூர்காரர்களை (திமுக) அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விதிகளை மீறி செயல்படுவதாக தெரிவித்தார்.



அதேபோல, சிறுவாணி அணைமுழு கொள்ளளவை எட்டுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்களின் தேவைகளின் மீது கவனம் செலுத்தாமல் கடைசி நேரத்தில் அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற முடியும் என திமுகவினர் எண்ணுவதாக தெரிவித்தார். மேலும், கோவையில் உள்ள விலங்கியல் பூங்கா முழுமையாக செயல்படவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், நாளை முழுவதும் பாஜக மாநில தலைவர் கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...