நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தினத்தன்று விடுமுறை அளிக்க தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதாவது 1951 பிரிவு 135 படி தேர்தல் நடைபெறும் தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு.


கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதாவது 1951 பிரிவு 135 படி தேர்தல் நடைபெறும் தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோவை தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுச்சாமி மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் நீலாவதி அறிவுறுத்தலின் படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதாவது 1951 பிரிவு 135 படி தேர்தல் நடைபெறும் தினத்தன்று அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தேர்தல் அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுப்பு வழங்கப்படுவது தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது சம்பந்தமாக, புகார் தெரிவிக்க கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் 944539872, கோவை மாநகரில் அப்துல் கபூர் 98430 29910, முருகானந்தம் 80563888 46, ராணி லட்சுமிபாய் 948936l 802, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஆர்எஸ் புரம் பகுதியில் தீபா பாரதி 994789312, மேட்டுப்பாளையத்தில் செல்லப்பா 99424370 22, பொள்ளாச்சியில் வாசுதேவன் 9626440609, ஆகியோரை தொடர்பு கொள்ளலாம், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...