நீலகிரி மாவட்டம் உதகையில், பள்ளிக்கு செல்லும் மாணவியை கட்டப்படுத்தி திருமணம் செய்ய உதவிய தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில், பள்ளிக்கு செல்லும் மாணவியை கட்டப்படுத்தி திருமணம் செய்ய உதவிய தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையை சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவியின் தாய் அவரை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜ்(26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், செல்வராஜூக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து, செல்வராஜ் மாணவியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். பின்னர், செல்வராஜ், மாணவியுடன் உதாகைக்கு வந்து தங்கியுள்ளார்.
இதற்கிடையே, மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக நீலகிரி மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதுகுறித்து, அந்த அமைப்பினர் உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில், போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த செல்வராஜ் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தனித்தனியாக விசாரித்தனர்.விசாரணையில், மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், உதகையை சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவியின் தாய் அவரை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜ்(26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், செல்வராஜூக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து, செல்வராஜ் மாணவியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். பின்னர், செல்வராஜ், மாணவியுடன் உதாகைக்கு வந்து தங்கியுள்ளார்.
இதற்கிடையே, மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக நீலகிரி மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதுகுறித்து, அந்த அமைப்பினர் உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில், போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த செல்வராஜ் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தனித்தனியாக விசாரித்தனர்.விசாரணையில், மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.