உதகையில் மாணவிக்கு கட்டாய திருமணம் தாய், டிரைவர் போக்சோவில் கைது

நீலகிரி மாவட்டம் உதகையில், பள்ளிக்கு செல்லும் மாணவியை கட்டப்படுத்தி திருமணம் செய்ய உதவிய தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில், பள்ளிக்கு செல்லும் மாணவியை கட்டப்படுத்தி திருமணம் செய்ய உதவிய தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையை சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவியின் தாய் அவரை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜ்(26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்.

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், செல்வராஜூக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து, செல்வராஜ் மாணவியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். பின்னர், செல்வராஜ், மாணவியுடன் உதாகைக்கு வந்து தங்கியுள்ளார்.

இதற்கிடையே, மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக நீலகிரி மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதுகுறித்து, அந்த அமைப்பினர் உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில், போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த செல்வராஜ் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தனித்தனியாக விசாரித்தனர்.விசாரணையில், மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...