கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரங்களில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்றி இயந்திரம் மூலம் துகள்களாக்கி அதே மரங்களுக்கு உரமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரங்களில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்றி இயந்திரம் மூலம் துகள்களாக்கி அதே மரங்களுக்கு உரமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவையில் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் சாலையோரம் உள்ள மரங்கள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன.
இதனால் மரக்கிளைகள் காய்ந்து அதில் உள்ள இலைகள் சாலைகளில் விழுகின்றன. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் அதிகரிக்கின்றன. மேலும் சாலையில் விழும் இலைகளால் வாகன ஒட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனிடையே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு டிராக்டர் மற்றும் மரக்கிளைகளைத் துகள்களாக்கும் இயந்திரம் என அனைத்து மண்டலங்களிலும் டிராக்டர்கள் ரோந்து செல்கின்றன.

அப்போது காய்ந்த மரக்கிளைகள், இலைகள் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அந்த இயந்திரத்தில் போடுகின்றனர். உடனடியாக மரக்கிளைகள், இலைகள் துகள்களாக மாறுகின்றன. இந்த துகள்கள் அனைத்தும் அதே மரத்திற்கு உரமாகப் போடப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தனியார் அமைப்புடன் இணைந்து இந்த டிராக்டர் மற்றும் இயந்திரங்கள் மாநகராட்சிக்குப் பெறப்பட்டன.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்று விழும் தறுவாயில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டன. தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக மரங்கள் வறண்டு மரக்கிளைகள் காய்ந்து வருகின்றன. அவ்வாறு உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது,’’ என்றார்.
கோவையில் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே வெளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் சாலையோரம் உள்ள மரங்கள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன.
இதனால் மரக்கிளைகள் காய்ந்து அதில் உள்ள இலைகள் சாலைகளில் விழுகின்றன. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் அதிகரிக்கின்றன. மேலும் சாலையில் விழும் இலைகளால் வாகன ஒட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனிடையே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு டிராக்டர் மற்றும் மரக்கிளைகளைத் துகள்களாக்கும் இயந்திரம் என அனைத்து மண்டலங்களிலும் டிராக்டர்கள் ரோந்து செல்கின்றன.
அப்போது காய்ந்த மரக்கிளைகள், இலைகள் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அந்த இயந்திரத்தில் போடுகின்றனர். உடனடியாக மரக்கிளைகள், இலைகள் துகள்களாக மாறுகின்றன. இந்த துகள்கள் அனைத்தும் அதே மரத்திற்கு உரமாகப் போடப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தனியார் அமைப்புடன் இணைந்து இந்த டிராக்டர் மற்றும் இயந்திரங்கள் மாநகராட்சிக்குப் பெறப்பட்டன.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்று விழும் தறுவாயில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டன. தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக மரங்கள் வறண்டு மரக்கிளைகள் காய்ந்து வருகின்றன. அவ்வாறு உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது,’’ என்றார்.