அதிமுக- பாஜக தனியாகப் போட்டியிட்டாலும் அது ஒன்றுதான் என மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்-திருப்பூரில் துரை வைகோ பேச்சு

அதிமுக-பாஜக தனியாகப் போட்டியிட்டாலும் அது ஒன்றுதான் என மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற தேர்தலை விட 80 சதவீதம் அதிகமாக திமுக கூட்டணி வெற்றி பெறும் என திருப்பூரில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அதிமுக- பாஜக தனியாகப் போட்டியிட்டாலும் அது ஒன்றுதான் என மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற தேர்தலை விட 80 சதவீதம் அதிகமாக திமுக கூட்டணி வெற்றி பெறும் என திருப்பூரில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.



திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய்யான தகவல்களைக் கூறி வருவதாகவும் பொய் குற்றச்சாட்டுகளுக்கான பதிலை மக்களிடம் எடுத்துக் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக நடத்தாதன் காரணமாகத் தமிழகத்திற்கு வர வேண்டிய 2500 கோடிக்கும் அதிகமான நிதி கிடைக்கப்பெறாமல் இருப்பதாகவும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் நடைபெறாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மாநிலங்களுக்கான நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு எனவும் ஆனால் மாநில சுயாட்சியை மதிக்காமல் பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருவதாகவும் ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாத சூழல் குறித்தும் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



சட்டமன்றம் முடக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு கண்டு வருவதாகவும், இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஜனநாயக ரீதியில் செயல்படும் எனவும் அதிமுக-பாஜக தனித்தனியாகப் போட்டியிட்டாலும், அது ஒன்றுதான் என மக்கள் தெரிந்து கொண்டு உள்ளதாகவும், கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே இவர்கள் திருந்தியிருக்க வேண்டும் ஆனால் இன்னும் திருந்தவில்லை மக்கள் இவர்களுக்குப் பாடத்தைப் புகட்டுவார்கள் எனவும் கடந்த சட்டமன்ற தேர்தலில் 80 சதவீதம் அதிகமாக திமுக கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...