திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், பரிசு பொருட்கள் கொடுப்பதாகவும், நிரஞ்சனா தேவி என்ற சுயேட்சை வேட்பாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி 97 வது வார்டு திமுக வேட்பாளராக, கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர் (கிழக்கு) மருதமலை சேனாதிபதியின் மகள், நிவேதா சேனாதிபதி போட்டியிடுகிறார். அதே வார்டில் சுயேச்சை வேட்பாளராக, நிரஞ்சனா தேவி என்பவர் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், திமுக வேட்பாளர், நிவேதா சேனாதிபதி, அப்பகுதி மக்களுக்கு பரிசுப்பொருட்கள் தருவதாகவும், எனவே அந்த வார்டில் தேர்தலை ரத்து செய்யுமாறு அல்லது அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுயேட்சை வேட்பாளரின் இந்த புகார் மனு, நிவேதா சேனாதிபதி ஆதரவாளர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சுயேச்சை வேட்பாளர் நிரஞ்சனாதேவி அளித்த புகாரில் திமுக வேட்பாளரின் பெயரை நிவேதா என்பதற்கு பதிலாக நிவேதிதா என தவறுதலாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி 97 வது வார்டு திமுக வேட்பாளராக, கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர் (கிழக்கு) மருதமலை சேனாதிபதியின் மகள், நிவேதா சேனாதிபதி போட்டியிடுகிறார். அதே வார்டில் சுயேச்சை வேட்பாளராக, நிரஞ்சனா தேவி என்பவர் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், திமுக வேட்பாளர், நிவேதா சேனாதிபதி, அப்பகுதி மக்களுக்கு பரிசுப்பொருட்கள் தருவதாகவும், எனவே அந்த வார்டில் தேர்தலை ரத்து செய்யுமாறு அல்லது அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுயேட்சை வேட்பாளரின் இந்த புகார் மனு, நிவேதா சேனாதிபதி ஆதரவாளர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சுயேச்சை வேட்பாளர் நிரஞ்சனாதேவி அளித்த புகாரில் திமுக வேட்பாளரின் பெயரை நிவேதா என்பதற்கு பதிலாக நிவேதிதா என தவறுதலாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.