கோவையில் பல்வேறு பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்..!

நாளை காலை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அவர், மாலை 6 மணிக்கு வேலாண்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.


கோவை: கோவையில் நாளை 16ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் தே.மு.தி.க., சார்பில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணியின்றி தனித்து களம் காணும் அவர்களுக்கு ஆதரவாக, பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா நாளை கோவை வருகிறார்.

நாளை காலை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அவர், மாலை 6 மணிக்கு வேலாண்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதனை தொடர்ந்து சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் மைதானத்தில், மாலை, 8:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில், தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...