மக்கள் அதிமுகவின் பக்கம் என திருப்பூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நிறைவேற்றியது அதிமுக அரசு எனவே மக்கள் அதிமுகவின் பக்கம் என திருப்பூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


திருப்பூர்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நிறைவேற்றியது அதிமுக அரசு எனவே மக்கள் அதிமுகவின் பக்கம் என திருப்பூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.



திருப்பூர், மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சந்திராபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.

இதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-



நான் முதலமைச்சராக இருந்த போது ஊரக உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தினோம். அதிமுகவில் ஏற்பட்ட சிறிய சுணக்கத்தை திமுக பயன்படுத்தி ஆட்சிக்கு வந்துவிட்டனர்.

எந்த ஆட்சி சிறந்தது என மக்களுக்கு புரிய வைத்தால் நாம் ஜெயித்து விடலாம். ஊடகத்தின் உரிமையை கொடுத்தது அதிமுக என குறிப்பிட்டார். எதையும் எதிர்பாராமல் உழைக்கின்ற நிர்வாகிகள் நிறைந்த கூட்டம் அதிமுகவில் மட்டுமே உள்ளது.



மேலும், மாநகராட்சியில் எம்.எல்.ஏ வை விட மேயருக்கு தான் அதிகாரம் அதிகம். அதனை நாம் வென்று எடுக்க வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரை எந்த கட்சியும் கோரிக்கை வைக்காத போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நிறைவேற்றியது அதிமுக அரசு என கூறினார்.

அதில் ஏராளமான ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். மேலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக இடம் கிடைத்தும் படிக்க முடியாதவர்கள் குறித்து தகவல் அறிந்து கட்டணம் இல்லாமல் 7.5 சதவீத ஒதுக்கீடு மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.



அதிமுக ஆட்சியில் உடுமலையில் கால்நடை மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தோம். ஆகையால், மக்கள் அதிமுகவின் பக்கம் உள்ளனர் என தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...