பொள்ளாச்சி சேலம் சாலை 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி சேலம் சாலையில் தனியாக நின்ற டெம்போவை சோதனை செய்தபோது 1,050 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி சேலம் சாலையில் தனியாக நின்ற டெம்போவை சோதனை செய்தபோது 1,050 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை பொள்ளாச்சி அலகு ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் தியாகராஜன் சார்பு ஆய்வாளர் பாரத நேரு மற்றும் காவலர்கள் இரவு 22:30 மணி அளவில் சேலம் to பாலக்காடு ரோடு நவக்கரை ஸ்டேட் பாங்க் TN 22 CT 0398 ABE லோடு ஆட்டோ நின்றிருந்தது.

சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அதில் சுமார் 50 கிலோ எடை உள்ள 21 சாக்கு மூட்டையில் சுமார் 1,050 கிலோ பொதுவிநியோக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மூன்று சக்கர வாகனம் மற்றும் ரேஷன் அரிசியைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த செலினா - பெண் வயது 47 பொது வினியோக ரேஷன் அரிசியை போத்தனூர் பகுதியில் சேகரித்து கேரளாவிற்குக் கள்ளச் சந்தையில் விற்பதற்குக் கடத்த முயன்றது தெரியவந்தது. வாகன ஓட்டுனர் மற்றும் கிளினர் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...