பாஜகவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் - திருப்பூரில் பாஜக மாநில தலைவர் பிரச்சாரம்..!

கடந்த 8 ஆண்டுகளாக, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால் வரப்போகும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.



திருப்பூர்: பாஜகவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-



பாஜக இந்த முறை தனியாக போட்டியிட்டு உங்களது ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறது. நமது வேட்பாளர்கள் பாரத பிரதமரின் கரங்களை வலுப்படுத்த போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு எண்ணில் அடங்கா சாதனைகளை செய்து வருகிறது. அனைவரையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு இரண்டு தடுப்பு ஊசி செலுத்தியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர். அதனால், வரப்போகும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எனவே, பல்லடம் பகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிடும்18 வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...