குன்னூர் அருகே கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி..!!

இரவு நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: குன்னூர் அருகே கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அட்டடியைச் சேர்ந்தவர் சூசைநாதன். இவரது தாயார் ரோசி (75). இரவு காவல் பணிக்கு சூசைநாதன் சென்ற நிலையில், ரோசி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து, ஒரு கரடி உள்ளே புகுந்துள்ளது. அப்போது, சத்தம் கேட்டு மூதாட்டி அலறினார்.

இந்த நிலையில், தான் துாங்கிய அறையின் கதவை மூதாட்டி திறக்காததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், கரடி அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர், கரடியின் கால் தடங்களை பதிவு செய்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் கரடி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் அச்சத்துடன் சென்று வருகிறோம். வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...