குன்னூர் அருகே கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி..!!

இரவு நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: குன்னூர் அருகே கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அட்டடியைச் சேர்ந்தவர் சூசைநாதன். இவரது தாயார் ரோசி (75). இரவு காவல் பணிக்கு சூசைநாதன் சென்ற நிலையில், ரோசி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து, ஒரு கரடி உள்ளே புகுந்துள்ளது. அப்போது, சத்தம் கேட்டு மூதாட்டி அலறினார்.

இந்த நிலையில், தான் துாங்கிய அறையின் கதவை மூதாட்டி திறக்காததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், கரடி அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர், கரடியின் கால் தடங்களை பதிவு செய்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் கரடி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் அச்சத்துடன் சென்று வருகிறோம். வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...