அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகை வழங்கினார்.
கோவை: கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிசுத் தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 5000 ரூபாய், இரண்டாம் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 2000 ரூபாயும், திருக்குறள் ஒப்புவித்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 10000 ரூபாய்க்கான காசோலையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிசுத் தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 5000 ரூபாய், இரண்டாம் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 2000 ரூபாயும், திருக்குறள் ஒப்புவித்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 10000 ரூபாய்க்கான காசோலையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.