கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!

அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகை வழங்கினார்.


கோவை: கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிசுத் தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.



பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 5000 ரூபாய், இரண்டாம் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு வென்ற மாணவ மாணவிகளுக்கு தலா 2000 ரூபாயும், திருக்குறள் ஒப்புவித்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 10000 ரூபாய்க்கான காசோலையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...