கோவையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!

காமராஜபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்குள்ள இஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு இஸ்திரி போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்தார். அப்பகுதி மக்களுடன் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.


கோவை: கோவை காமராஜபுரத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அங்குள்ள ஒரு இஸ்திரி கடையில், துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவர்ந்து வாக்குகளை பெற பல்வேறு புதிய உக்திகளை வகுத்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.



அந்த வகையில், இன்று கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,கோவை மாநகராட்சி பகுதிகளான ஆவாரம்பாளையம் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, பிற்படுத்தப்பட்டமக்கள் அதிகம் வாழும் காமராஜபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்குள்ள இஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு இஸ்திரி போட்டுகொடுத்து ஆதரவு கோரினார்.



அப்பகுதி மக்களுடன் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.பின்னர், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...