அரசுப் பேருந்து சாலையின் நடுவிலிருந்த இடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தை பின் தொடர்ந்து வந்த கார் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
கோவை: அரசுப் பேருந்து சாலையின் நடுவிலிருந்த இடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தை பின் தொடர்ந்து வந்த கார் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
நேற்றைய தினம் இரவு சோமனூர் பவர் ஹவுஸ் பகுதியில் அரசு பேருந்து, பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவிலிருந்த தடுப்பின் மீது ஏறி ஒருபுறம் சாய்ந்தது.
அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், பேருந்தில் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இந்நிலையில், பேருந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் பேருந்தை பின்தொடர்ந்து சென்ற கார் கண்ணிமைக்கும் நொடியில் சட்டென நிறுத்தப்பட்டதன் காரணமாக விபத்திலிருந்து தப்பிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, அன்னூரிலிருந்து வரவழைக்கப்பட்ட பேருந்து பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்பாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
நேற்றைய தினம் இரவு சோமனூர் பவர் ஹவுஸ் பகுதியில் அரசு பேருந்து, பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவிலிருந்த தடுப்பின் மீது ஏறி ஒருபுறம் சாய்ந்தது.
அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், பேருந்தில் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இந்நிலையில், பேருந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் பேருந்தை பின்தொடர்ந்து சென்ற கார் கண்ணிமைக்கும் நொடியில் சட்டென நிறுத்தப்பட்டதன் காரணமாக விபத்திலிருந்து தப்பிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, அன்னூரிலிருந்து வரவழைக்கப்பட்ட பேருந்து பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்பாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.