வரதட்சணை கொடுமை: கோவையில் வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறையில் வரதட்சணை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வங்கி மேலாளர் மீது மனைவி பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறையில் வரதட்சணை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வங்கி மேலாளர் மீது மனைவி பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரின் மனைவி பிரதீபா (22). இவருக்குக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கோகுல் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

திருமணத்தின் போது பிரதிபாவின் பெற்றோர் 10 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பிரதீபாவிற்கும் அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே வரதட்சணை குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் 100 பவுன் தங்கநகை வரதட்சணை வேண்டுமென கோகுல் மற்றும் அவரது தாயார் செண்பகவல்லி ஆகியோர் கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, பிரதீபா பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பிரதிபாவின் கணவர் கோகுல் (27) மற்றும் அவரது தாயார் செண்பகவல்லி (48) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...